சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
8.110   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருக்கோத்தும்பி - பூவேறு கோனும்
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
Audio: https://sivaya.org/thiruvaasagam/10 Thirukothumbi Thiruvasagam.mp3
8.111   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச்
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
Audio: https://sivaya.org/thiruvasagam2/11 Thiruthellaenam.mp3
8.112   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
Audio: https://sivaya.org/thiruvaasagam/12 Thiruchalal Thiruvasagam.mp3
8.113   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்பூவல்லி - இணையார் திருவடி
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
Audio: https://sivaya.org/thiruvaasagam/13 Thirupoouvalli Thiruvasagam.mp3
8.115   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப்
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
Audio: https://sivaya.org/thiruvaasagam/15 Thiruthonokkam Thiruvasagam.mp3
8.131   மாணிக்க வாசகர்    திருவாசகம்   கண்டபத்து - இந்திரிய வயமயங்கி
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
Audio: https://sivaya.org/thiruvaasagam/31 Kandapathu Thiruvasagam.mp3
Audio: https://sivaya.org/thiruvasagam2/31 Kanda pathu.mp3
8.138   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருவேசறவு - இரும்புதரு மனத்தேனை
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
Audio: https://sivaya.org/thiruvaasagam/38 Thiruvesaravu Thiruvasagam.mp3

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.110   திருக்கோத்தும்பி - பூவேறு கோனும்  
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தரவுகொச்சகக் கலிப்பா
பூ ஏறு கோனும், புரந்தரனும், பொற்பு அமைந்த
நா ஏறு செல்வியும், நாரணனும், நான்மறையும்,
மா ஏறு சோதியும், வானவரும், தாம் அறியாச்
சே ஏறு சேவடிக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[1]
நான் ஆர்? என் உள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்? என்னை யார் அறிவார்
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்? மதி மயங்கி
ஊன் ஆர் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன்
தேன் ஆர் கமலமே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[2]
தினைத்தனை உள்ளது ஓர் பூவினில் தேன் உண்ணாதே,
நினைத்தொறும், காண்தொறும், பேசும்தொறும், எப்போதும்,
அனைத்து எலும்பு உள் நெக, ஆனந்தத் தேன் சொரியும்
குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[3]
கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின்,
என் அப்பன், என் ஒப்பு இல் என்னையும் ஆட்கொண்டருளி,
வண்ணப் பணித்து, என்னை வா' என்ற வான் கருணைச்
சுண்ணப் பொன் நீற்றற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[4]
அத் தேவர் தேவர்; அவர் தேவர்;' என்று, இங்ஙன்,
பொய்த் தேவு பேசி, புலம்புகின்ற பூதலத்தே,
பத்து ஏதும் இல்லாது, என் பற்று அற, நான் பற்றிநின்ற
மெய்த் தேவர் தேவற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[5]
வைத்த நிதி, பெண்டிர், மக்கள், குலம், கல்வி, என்னும்
பித்த உலகில், பிறப்போடு இறப்பு, என்னும்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[6]
சட்டோ நினைக்க, மனத்து அமுது ஆம் சங்கரனை,
கெட்டேன், மறப்பேனோ? கேடுபடாத் திருவடியை
ஒட்டாத பாவித் தொழும்பரை நாம் உரு அறியோம்;
சிட்டாய சிட்டற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[7]
ஒன்று ஆய், முளைத்து, எழுந்து, எத்தனையோ கவடு விட்டு,
நன்று ஆக வைத்து, என்னை நாய் சிவிகை ஏற்றுவித்த
என் தாதை; தாதைக்கும், எம் அனைக்கும், தம் பெருமான்!
குன்றாத செல்வற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[8]
கரணங்கள் எல்லாம் கடந்துநின்ற கறை மிடற்றன்
சரணங்களே சென்று சார்தலுமே, தான் எனக்கு
மரணம், பிறப்பு, என்று, இவை இரண்டின் மயக்கு அறுத்த
கருணைக் கடலுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[9]
நோய் உற்று, மூத்து, நான் நுந்து கன்றாய் இங்கு இருந்து,
நாய் உற்ற செல்வம் நயந்து அறியாவண்ணம் எல்லாம்,
தாய் உற்று வந்து, என்னை ஆண்டுகொண்ட தன் கருணைத்
தேய் உற்ற செல்வற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[10]
வல் நெஞ்சக் கள்வன், மன வலியன்,' என்னாதே,
கல் நெஞ்சு உருக்கி, கருணையினால் ஆண்டுகொண்ட,
அன்னம் திளைக்கும் அணி தில்லை அம்பலவன்
பொன் அம் கழலுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[11]
நாயேனைத் தன் அடிகள் பாடுவித்த நாயகனை,
பேயேனது உள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனை,
சீ ஏதும் இல்லாது என் செய் பணிகள் கொண்டருளும்
தாய் ஆன ஈசற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[12]
நான் தனக்கு அன்பு இன்மை, நானும், தானும், அறிவோம்;
தான் என்னை ஆட்கொண்டது எல்லாரும் தாம் அறிவார்;
ஆன கருணையும் அங்கு உற்றே தான்; அவனே
கோன் என்னைக் கூட குளிர்ந்து ஊதாய்; கோத்தும்பீ!

[13]
கரு ஆய், உலகினுக்கு அப்புறம் ஆய், இப் புறத்தே
மரு ஆர் மலர்க் குழல் மாதினொடும் வந்தருளி,
அரு ஆய், மறை பயில் அந்தணன் ஆய், ஆண்டுகொண்ட
திரு ஆன தேவற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[14]
நானும், என் சிந்தையும், நாயகனுக்கு எவ் இடத்தோம்
தானும், தன் தையலும், தாழ் சடையோன் ஆண்டிலனேல்?
வானும், திசைகளும், மா கடலும், ஆய பிரான்
தேன் உந்து சேவடிக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[15]
உள்ளப்படாத திருஉருவை உள்ளுதலும்,
கள்ளப்படாத களிவந்த வான் கருணை
வெள்ளப் பிரான், எம்பிரான், என்னை வேறே ஆட்
கொள் அப் பிரானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[16]
பொய் ஆய செல்வத்தே புக்கு, அழுந்தி, நாள்தோறும்
மெய்யாக் கருதிக் கிடந்தேனை, ஆட்கொண்ட
ஐயா! என் ஆர் உயிரே! அம்பலவா! என்று, அவன் தன்
செய் ஆர் மலர் அடிக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[17]
தோலும், துகிலும்; குழையும், சுருள் தோடும்;
பால் வெள்ளை நீறும், பசும் சாந்தும்; பைங் கிளியும்,
சூலமும்; தொக்க வளையும்; உடைத் தொன்மைக்
கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய்; கோத்தும்பீ!

[18]
கள்வன், கடியன், கலதி, இவன்' என்னாதே,
வள்ளல், வரவர வந்து ஒழிந்தான் என் மனத்தே;
உள்ளத்து உறு துயர், ஒன்று ஒழியாவண்ணம், எல்லாம்
தெள்ளும் கழலுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[19]
பூ மேல் அயனோடு மாலும் புகல் அரிது என்று
ஏமாறி நிற்க, அடியேன் இறுமாக்க,
நாய் மேல் தவிசு இட்டு, நன்றாப் பொருட்படுத்த
தீ மேனியானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[20]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.111   திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச்  
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தரவுகொச்சகக் கலிப்பா
திருமாலும் | பன்றியாய்ச் | சென்று உணராத் | திருவடியை,
உரு நாம் | அறிய, ஓர் | அந்தணன் ஆய், | ஆண்டுகொண்டான்;
ஒரு நாமம், | ஓர் உருவம், | ஒன்றும் இல்லாற்கு,| ஆயிரம்
திருநாமம் | பாடி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ!

[1]
திரு ஆர் | பெருந்துறை | மேய பிரான் | என் பிறவிக்
கரு வேர் | அறுத்தபின், | யாவரையும் | கண்டது இல்லை;
அரு ஆய்,| உருவமும் | ஆய பிரான், | அவன் மருவும்
திருவாரூர் | பாடி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ!

[2]
அரிக்கும்,| பிரமற்கும்,| அல்லாத |தேவர்கட்கும்,
தெரிக்கும் | படித்து அன்றி | நின்ற சிவம், | வந்து, நம்மை
உருக்கும், | பணி கொள்ளும், | என்பது கேட்டு, | உலகம் எல்லாம்
சிரிக்கும் | திறம் பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ!

[3]
அவம் ஆய | தேவர் | அவ கதியில் | அழுந்தாமே
பவ மாயம் | காத்து, என்னை | ஆண்டுகொண்ட | பரஞ்சோதி
நவம் ஆய | செம் சுடர் | நல்குதலும், | நாம் ஒழிந்து,
சிவம் ஆன | வா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ!

[4]
அருமந்த | தேவர், | அயன், திருமாற்கு, | அரிய சிவம்
உருவந்து, | பூதலத்தோர் | உகப்பு எய்த, | கொண்டருளி,
கரு வெந்து | வீழக் | கடைக்கணித்து, என் | உளம் புகுந்த
திரு வந்த | வா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ!

[5]
அரை ஆடு | நாகம் | அசைத்த பிரான், | அவனியின்மேல்,
வரை ஆடு | மங்கை தன் | பங்கொடும், வந்து, | ஆண்ட திறம்
உரை ஆட, | உள் ஒளி ஆட, | ஒள் மா மலர்க் | கண்களில் நீர்
திரை ஆடு | மா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ!

[6]
ஆ! ஆ! | அரி, அயன், | இந்திரன், வானோர்க்கு, | அரிய சிவன்,
வா, வா| என்று, என்னையும் | பூதலத்தே |வலிந்து ஆண்டுகொண்டான்;
பூ ஆர் | அடிச் சுவடு | என் தலைமேல் | பொறித்தலுமே,
தே ஆன | வா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ!

[7]
கறங்கு ஓலை | போல்வதுஓர் | காயப் பிறப்போடு | இறப்பு என்னும்,
அறம், பாவம், | என்று இரண்டு | அச்சம் தவிர்த்து, என்னை | ஆண்டுகொண்டான்;
மறந்தேயும் | தன் கழல் நான் | மறவாவண்ணம் | நல்கிய, அத்
திறம் பாடல் | பாடி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ!

[8]
கல் நார் | உரித்து என்ன, | என்னையும் | தன் கருணையினால்
பொன் ஆர் | கழல் பணித்து, | ஆண்ட பிரான் | புகழ் பாடி,
மின் நேர் | நுடங்கு இடை, | செம் துவர் வாய், | வெள் நகையீர்!
தென்னா, தென்னா | என்று தெள்ளேணம் | கொட்டாமோ!

[9]
கனவேயும் | தேவர்கள் | காண்பு அரிய | கனை கழலோன்
புன வேய் | அன வளைத் | தோளியொடும் | புகுந்தருளி,
நனவே | எனைப் பிடித்து, ஆட்கொண்டவா | நயந்து, நெஞ்சம்,
சின வேல் கண் | நீர் மல்க | தெள்ளேணம் | கொட்டாமோ!

[10]
கயல் மாண்ட | கண்ணி தன் | பங்கன் எனைக் | கலந்து ஆண்டலுமே,
அயல் மாண்டு, | அருவினைச் | சுற்றமும் மாண்டு, | அவனியின்மேல்
மயல் மாண்டு, | மற்று உள்ள | வாசகம் மாண்டு, | என்னுடைய
செயல் மாண்ட | வா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ!

[11]
முத்திக்கு | உழன்று | முனிவர் குழாம் | நனி வாட,
அத்திக்கு | அருளி, | அடியேனை | ஆண்டுகொண்டு,
பத்திக் | கடலுள் | பதித்த | பரஞ்சோதி,
தித்திக்கு | மா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ!

[12]
பார் பாடும், | பாதாளர் | பாடும், விண்ணோர் | தம் பாடும்,
ஆர் பாடும், | சாரா | வகை அருளி, | ஆண்டுகொண்ட
நேர் பாடல் | பாடி, | நினைப்பு அரிய | தனிப் பெரியோன்
சீர் பாடல் | பாடி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ!

[13]
மாலே, | பிரமனே, மற்று ஒழிந்த | தேவர்களே,
நூலே, | நுழைவுஅரிய | நுண்ணியன் ஆய், | வந்து, அடியேன்
பாலே | புகுந்து, | பரிந்து உருக்கும் | பாவகத்தால்,
சேல் ஏர் | கண் நீர் மல்க | தெள்ளேணம் | கொட்டாமோ!

[14]
உருகிப் | பெருகி, | உளம் குளிர | முகந்துகொண்டு,
பருகற்கு | இனிய | பரம் கருணைத் | தடம் கடலை
மருவி, | திகழ் தென்னன் | வார் கழலே | நினைந்து, அடியோம்
திருவைப் | பரவி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ!

[15]
புத்தன், | புரந்தர ஆதியர், | அயன், மால், | போற்றி செயும்
பித்தன்; | பெருந்துறை | மேய பிரான்; | பிறப்பு அறுத்த
அத்தன்; | அணி தில்லை | அம்பலவன்; | அருள் கழல்கள்
சித்தம் | புகுந்தவா | தெள்ளேணம் | கொட்டாமோ!

[16]
உவலைச் | சமயங்கள், | ஒவ்வாத | சாத்திரம், ஆம்
சவலைக் | கடல் உளனாய்க் | கிடந்து, | தடுமாறும்
கவலைக் | கெடுத்து, | கழல் இணைகள் | தந்தருளும்
செயலைப் | பரவி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ!

[17]
வான் கெட்டு | மாருதம் | மாய்ந்து, அழல், நீர், | மண், கெடினும்,
தான் கெட்டல் | இன்றி, | சலிப்பு அறியாத் | தன்மையனுக்கு,
ஊன் கெட்டு, | உயிர் கெட்டு, | உணர்வு கெட்டு, என் | உள்ளமும் போய்,
நான் கெட்ட | வா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ!

[18]
விண்ணோர் | முழு முதல்; | பாதாளத் | தார் வித்து;
மண்ணோர் | மருந்து; அயன், | மால், உடைய | வைப்பு; அடியோம்
கண் ஆர, | வந்துநின்றான்; | கருணைக் | கழல் பாடி,
தென்னா, தென்னா | என்று தெள்ளேணம் | கொட்டாமோ!

[19]
குலம் பாடி | , கொக்கு இறகும் | பாடி, | கோல் வளையாள்
நலம் பாடி, | நஞ்சு உண்ட | வா பாடி, | நாள்தோறும்
அலம்பு ஆர் | புனல் தில்லை | அம்பலத்தே | ஆடுகின்ற
சிலம்பு ஆடல் | பாடி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ!

[20]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.112   திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு  
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தரவுகொச்சகக் கலிப்பா
திக்குவாய் மாறிச் சீர் பெறுவதற்கும் , சிறந்த பேச்சாளர் ஆவதற்க்கும் ஓதவேண்டிய பதிகம்
பூசுவதும் வெள் நீறு, பூண்பதுவும் பொங்கு அரவம்,
பேசுவதும் திருவாயால் மறை போலும்? காண், ஏடீ!
பூசுவதும், பேசுவதும், பூண்பதுவும், கொண்டு என்னை?
ஈசன் அவன் எவ் உயிர்க்கும் இயல்பு ஆனான்; சாழலோ!

[1]
என் அப்பன், எம்பிரான், எல்லார்க்கும் தான் ஈசன்;
துன்னம் பெய் கோவணமாக் கொள்ளும்அது என்? ஏடீ!
மன்னு கலை, துன்னு பொருள் மறை நான்கே, வான் சரடா,
தன்னையே கோவணமா, சாத்தினன், காண்; சாழலோ!

[2]
கோயில் சுடுகாடு, கொல் புலித் தோல் நல் ஆடை,
தாயும் இலி, தந்தை இலி, தான் தனியன் காண்; ஏடீ!
தாயும் இலி, தந்தை இலி, தான் தனியன்; ஆயிடினும்,
காயில், உலகு அனைத்தும் கல் பொடி, காண்; சாழலோ!

[3]
அயனை, அனங்கனை, அந்தகனை, சந்திரனை,
வயனங்கள் மாயா வடுச் செய்தான்; காண், ஏடீ!
நயனங்கள் மூன்று உடைய நாயகனே தண்டித்தால்,
சயம் அன்றோ வானவர்க்கு, தாழ் குழலாய்? சாழலோ!

[4]
தக்கனையும், எச்சனையும், தலை அறுத்து, தேவர் கணம்
தொக்கென வந்தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்? ஏடீ!
தொக்கென வந்தவர் தம்மைத் தொலைத்தருளி அருள் கொடுத்து, அங்கு
எச்சனுக்கு மிகைத் தலை மற்று அருளினன், காண்; சாழலோ!

[5]
அலரவனும், மாலவனும், அறியாமே, அழல் உரு ஆய்,
நிலம் முதல், கீழ் அண்டம் உற, நின்றதுதான் என்? ஏடீ!
நிலம் முதல், கீழ் அண்டம் உற, நின்றிலனேல் இருவரும் தம்
சலம் முகத்தால் ஆங்காரம் தவிரார் காண் சாழலோ!

[6]
மலை மகளை ஒரு பாகம் வைத்தலுமே மற்று ஒருத்தி
சலம் முகத்தால் அவன் சடையில் பாயும் அது என் ஏடீ
சலம் முகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல் தரணி எல்லாம்
பில முகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடு ஆம் சாழலோ!

[7]
கோலாலம் ஆகிக் குரை கடல்வாய் அன்று எழுந்த
ஆலாலம் உண்டான் அவன் சதுர் தான் என் ஏடீ
ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன் மால் உள்ளிட்ட
மேல் ஆய தேவர் எல்லாம் வீடுவர் காண் சாழலோ!

[8]
தென் பால் உகந்து ஆடும் தில்லைச் சிற்றம்பலவன்
பெண் பால் உகந்தான்; பெரும் பித்தன், காண்; ஏடீ!
பெண் பால் உகந்திலனேல், பேதாய்! இரு நிலத்தோர்
விண் பால் யோகு எய்தி, வீடுவர், காண்; சாழலோ!

[9]
தான் அந்தம் இல்லான், தனை அடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத்து அழுந்துவித்தான், காண்; ஏடீ!
ஆனந்த வெள்ளத்து அழுந்துவித்த திருவடிகள்,
வான் உந்து தேவர்கட்கு ஓர் வான் பொருள், காண்; சாழலோ!

[10]
நங்காய்! இது என்ன தவம்? நரம்போடு, எலும்பு, அணிந்து,
கங்காளம் தோள்மேலே காதலித்தான், காண்; ஏடீ!
கங்காளம் ஆமா கேள்; கால அந்தரத்து இருவர்
தம் காலம் செய்யத் தரித்தனன், காண்; சாழலோ!

[11]
கான் ஆர் புலித் தோல் உடை; தலை ஊண்; காடு பதி;
ஆனால், அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆர்? ஏடீ!
ஆனாலும், கேளாய்; அயனும் திருமாலும்,
வான் நாடர் கோவும், வழி அடியார்; சாழலோ!

[12]
மலை அரையன் பொன் பாவை, வாள் நுதலாள், பெண் திருவை
உலகு அறிய, தீ வேட்டான் என்னும்அது என்? ஏடீ
உலகு அறிய, தீ வேளாது ஒழிந்தனனேல், உலகு அனைத்தும்,
கலை நவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடும், காண்; சாழலோ!

[13]
தேன் புக்க தண் பணை சூழ் தில்லைச் சிற்றம்பலவன்,
தான் புக்கு நட்டம் பயிலும்அது என்? ஏடீ!
தான் புக்கு நட்டம் பயின்றிலனேல், தரணி எல்லாம்,
ஊன் புக்க வேல் காளிக்கு ஊட்டு ஆம், காண்; சாழலோ!

[14]
கட கரியும், பரி மாவும், தேரும், உகந்து ஏறாதே,
இடபம் உகந்து ஏறிய ஆறு, எனக்கு அறிய இயம்பு; ஏடீ!
தட மதில்கள் அவை மூன்றும் தழல் எரித்த அந் நாளில்
இடபம் அது ஆய்த் தாங்கினான் திருமால், காண்; சாழலோ!

[15]
நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை,
அன்று, ஆலின் கீழ் இருந்து, அங்கு, அறம் உரைத்தான், காண்; ஏடீ!
அன்று, ஆலின் கீழ் இருந்து, அங்கு, அறம் உரைத்தான், ஆயிடினும்,
கொன்றான், காண், புரம் மூன்றும் கூட்டோடே; சாழலோ!

[16]
அம்பலத்தே கூத்து ஆடி, அமுது செய்யப் பலி திரியும்
நம்பனையும் தேவன் என்று நண்ணும்அது என்? ஏடீ!
நம்பனையும் ஆமா கேள்; நான்மறைகள் தாம் அறியா,
எம்பெருமான், ஈசா' என்று ஏத்தின, காண்; சாழலோ!

[17]
சலம் உடைய சலந்தரன் தன் உடல் தடிந்த நல் ஆழி,
நலம் உடைய நாரணற்கு, அன்று, அருளிய ஆறு என்? ஏடீ!
நலம் உடைய நாரணன், தன் நயனம் இடந்து, அரன் அடிக்கீழ்
அலர் ஆக இட, ஆழி அருளினன், காண்; சாழலோ!

[18]
அம்பரம் ஆம், புள்ளித் தோல்; ஆலாலம், ஆர் அமுதம்;
எம்பெருமான் உண்ட சதிர், எனக்கு அறிய இயம்புல் ஏடீ!
எம்பெருமான் ஏது உடுத்து, அங்கு ஏது அமுது செய்திடினும்,
தம் பெருமை தான் அறியாத் தன்மையன், காண்; சாழலோ!

[19]
அரும் தவருக்கு, ஆலின் கீழ், அறம் முதலா நான்கினையும்
இருந்து, அவருக்கு அருளும்அது எனக்கு அறிய இயம்பு; ஏடீ!
அரும் தவருக்கு, அறம் முதல் நான்கு அன்று அருளிச்செய்திலனேல்,
திருந்த, அவருக்கு, உலகு இயற்கை தெரியா, காண்; சாழலோ!

[20]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.113   திருப்பூவல்லி - இணையார் திருவடி  
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தரவுகொச்சகக் கலிப்பா
இணை ஆர் திருவடி என் தலைமேல் வைத்தலுமே,
துணை ஆன சுற்றங்கள் அத்தனையும், துறந்தொழிந்தேன்;
அணை ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர் பாடி பூவல்லி கொய்யாமோ!

[1]
எந்தை, எம் தாய், சுற்றம், மற்றும் எல்லாம், என்னுடைய
பந்தம் அறுத்து, என்னை ஆண்டுகொண்ட பாண்டிப் பிரான்;
அந்த இடைமருதில், ஆனந்தத் தேன் இருந்த
பொந்தைப் பரவி, நாம் பூவல்லி கொய்யாமோ!

[2]
நாயின் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்து,
தாயின் பெரிதும் தயா உடைய தம் பெருமான்,
மாயப் பிறப்பு அறுத்து, ஆண்டான்; என் வல் வினையின்
வாயில் பொடி அட்டி பூவல்லி கொய்யாமோ!

[3]
பண் பட்ட தில்லைப் பதிக்கு அரசைப் பரவாதே,
எண் பட்ட தக்கன், அருக்கன், எச்சன், இந்து, அனல்,
விண் பட்ட பூதப் படை வீரபத்திரரால்
புண் பட்டவா பாடி பூவல்லி கொய்யாமோ!

[4]
தேன் ஆடு கொன்றை சடைக்கு அணிந்த சிவபெருமான்
ஊன் நாடி, நாடி வந்து, உட்புகுந்தான்; உலகர் முன்னே
நான் ஆடி ஆடி நின்று, ஓலம் இட, நடம் பயிலும்
வான் நாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ!

[5]
எரி மூன்று தேவர்க்கு இரங்கி, அருள்செய்தருளி,
சிரம் மூன்று அற, தன் திருப் புருவம் நெரித்தருளி,
உரு மூன்றும் ஆகி, உணர்வு அரிது ஆம் ஒருவனுமே
புரம் மூன்று எரித்தவா பூவல்லி கொய்யாமோ!

[6]
வணங்க, தலை வைத்து; வார் கழல், வாய், வாழ்த்த வைத்து;
இணங்க, தன் சீர் அடியார் கூட்டமும் வைத்து; எம்பெருமான்,
அணங்கோடு அணி தில்லை அம்பலத்தே, ஆடுகின்ற
குணம் கூர, பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!

[7]
நெறி செய்தருளி, தன் சீர் அடியார் பொன் அடிக்கே
குறி செய்துகொண்டு, என்னை ஆண்ட பிரான் குணம் பரவி,
முறி செய்து, நம்மை முழுது உழற்றும் பழ வினையைக்
கிறி செய்தவா பாடி பூவல்லி கொய்யாமோ!

[8]
பல் நாள் பரவிப் பணி செய்ய, பாத மலர்
என் ஆகம் துன்னவைத்த பெரியோன், எழில் சுடர் ஆய்,
கல் நார் உரித்து, என்னை ஆண்டுகொண்டான்; கழல் இணைகள்
பொன் ஆனவா பாடி பூவல்லி கொய்யாமோ!

[9]
பேர் ஆசை ஆம் இந்தப் பிண்டம் அற, பெருந்துறையான்,
சீர் ஆர் திருவடி என் தலைமேல் வைத்த பிரான்,
கார் ஆர் கடல் நஞ்சை உண்டு உகந்த காபாலி,
போர் ஆர் புரம் பாடி பூவல்லி கொய்யாமோ!

[10]
பாலும், அமுதமும், தேனுடன், ஆம் பரா பரம் ஆய்,
கோலம் குளிர்ந்து, உள்ளம் கொண்ட பிரான் குரை கழல்கள்
ஞாலம் பரவுவார் நல் நெறி ஆம்; அந் நெறியே
போலும் புகழ் பாடி பூவல்லி கொய்யாமோ!

[11]
வானவன், மால், அயன், மற்றும் உள்ள தேவர்கட்கும்
கோன் அவன் ஆய் நின்று, கூடல் இலாக் குணக் குறியோன்
ஆன நெடும் கடல் ஆலாலம் அமுது செய்ய,
போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ!

[12]
அன்று, ஆல நீழல் கீழ் அரு மறைகள், தான் அருளி,
நன்று ஆக வானவர், மா முனிவர், நாள்தோறும்,
நின்று, ஆர ஏத்தும் நிறை கழலோன், புனை கொன்றைப்
பொன் தாது பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!

[13]
படம் ஆக, என் உள்ளே தன் இணைப் போது அவை அளித்து, இங்கு
இடம் ஆகக் கொண்டிருந்த, ஏகம்பம் மேய பிரான்,
தடம் ஆர் மதில் தில்லை அம்பலமே தான் இடமா,
நடம் ஆடுமா பாடி பூவல்லி கொய்யாமோ!

[14]
அங்கி, அருக்கன், இராவணன், அந்தகன், கூற்றன்,
செம் கண் அரி, அயன், இந்திரனும், சந்திரனும்,
பங்கம் இல் தக்கனும், எச்சனும், தம் பரிசு அழிய,
பொங்கிய சீர் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!

[15]
திண் போர் விடையான், சிவபுரத்தார் போர் ஏறு,
மண்பால், மதுரையில் பிட்டு அமுது செய்தருளி,
தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட,
புண் பாடல் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!

[16]
முன் ஆய மால் அயனும், வானவரும், தானவரும்,
பொன் ஆர் திருவடி தாம் அறியார்; போற்றுவதே?
என் ஆகம் உள் புகுந்து ஆண்டுகொண்டான் இலங்கு அணியாம்
பல் நாகம் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!

[17]
சீர் ஆர் திருவடித் திண் சிலம்பு சிலம்பு ஒலிக்கே
ஆராத ஆசை அது ஆய், அடியேன் அகம் மகிழ,
தேர் ஆர்ந்த வீதிப் பெருந்துறையான் திரு நடம் செய்
பேரானந்தம் பாடி பூவல்லி கொய்யாமோ!

[18]
அத்தி உரித்து, அது போர்த்தருளும் பெருந்துறையான்,
பித்த வடிவு கொண்டு, இவ் உலகில் பிள்ளையும் ஆய்,
முத்தி முழு முதல், உத்தரகோசமங்கை வள்ளல்,
புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ!

[19]
மா ஆர வேறி மதுரைநகர் புகுந்தருளித்
தேவார்ந்த கோலத் திகழப் பெருந்துறையான்
கோவாகி வந்தெம்மைக் குற்றேவல் கொண்டருளும்
பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ

[20]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.115   திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப்  
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தரவுகொச்சகக் கலிப்பா
பூத்து ஆரும் பொய்கைப் புனல் இதுவே, எனக் கருதி,
பேய்த்தேர் முகக்க உறும் பேதை குணம் ஆகாமே,
தீர்த்தாய்; திகழ் தில்லை அம்பலத்தே திரு நடம் செய்
கூத்தா! உன் சேவடி கூடும்வண்ணம் தோள் நோக்கம்!

[1]
என்றும் பிறந்து, இறந்து, ஆழாமே, ஆண்டுகொண்டான்;
கன்றால் விளவு எறிந்தான், பிரமன், காண்பு அரிய
குன்றாத சீர்த் தில்லை அம்பலவன்; குணம் பரவி,
துன்று ஆர் குழலினீர்! தோள் நோக்கம் ஆடாமோ!

[2]
பொருள் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்க,
செருப்பு உற்ற சீர் அடி, வாய்க் கலசம், ஊன் அமுதம்,
விருப்பு உற்று, வேடனார் சேடு எறிய மெய் குளிர்ந்து, அங்கு,
அருள் பெற்று, நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ!

[3]
கல் போலும் நெஞ்சம் கசிந்து உருக, கருணையினால்
நிற்பானைப் போல, என் நெஞ்சின் உள்ளே புகுந்தருளி,
நல் பால் படுத்து என்னை, நாடு அறியத் தான் இங்ஙன்,
சொல் பாலது ஆனவா தோள் நோக்கம் ஆடாமோ!

[4]
நிலம், நீர், நெருப்பு, உயிர், நீள் விசும்பு, நிலா, பகலோன்,
புலன் ஆய மைந்தனோடு, எண் வகையாய்ப் புணர்ந்துநின்றான்;
உலகு ஏழ் என, திசை பத்து என, தான் ஒருவனுமே
பல ஆகி, நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ!

[5]
புத்தன் முதல் ஆய புல் அறிவின் பல் சமயம்,
தம் தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டு நிற்க,
சித்தம் சிவம் ஆக்கி, செய்தனவே தவம் ஆக்கும்
அத்தன் கருணையினால் தோள் நோக்கம் ஆடாமோ!

[6]
தீது இல்லை மாணி, சிவ கருமம் சிதைத்தானை,
சாதியும் வேதியன், தாதை தனை, தாள் இரண்டும்
சேதிப்ப, ஈசன் திருவருளால் தேவர் தொழ,
பாதகமே சோறு பற்றினவா தோள் நோக்கம்!

[7]
மானம் அழிந்தோம்; மதி மறந்தோம்; மங்கைநல்லீர்!
வானம் தொழும் தென்னன் வார் கழலே நினைந்து, அடியோம்,
ஆனந்தக் கூத்தன் அருள் பெறின், நாம் அவ்வணமே
ஆனந்தம் ஆகி, நின்று ஆடாமோ தோள் நோக்கம்!

[8]
எண் உடை மூவர் இராக்கதர்கள், எரி பிழைத்து,
கண் நுதல் எந்தை கடைத்தலைமுன் நின்றதன் பின்,
எண் இலி இந்திரர், எத்தனையோ பிரமர்களும்,
மண்மிசை மால் பலர், மாண்டனர்; காண் தோள் நோக்கம்!

[9]
பங்கயம் ஆயிரம் பூவினில், ஓர் பூக் குறைய,
தம் கண் இடந்து, அரன் சேவடிமேல் சாத்தலுமே,
சங்கரன், எம் பிரான், சக்கரம் மாற்கு அருளிய ஆறு,
எங்கும் பரவி, நாம் தோள் நோக்கம் ஆடாமோ!

[10]
காமன் உடல்; உயிர், காலன்; பல், காய் கதிரோன்;
நா மகள் நாசி; சிரம், பிரமன்; கரம், எரியை;
சோமன் கலை; தலை தக்கனையும், எச்சனையும்;
தூய்மைகள் செய்தவா தோள் நோக்கம் ஆடாமோ!

[11]
பிரமன், அரி, என்ற இருவரும், தம் பேதைமையால்
பரமம், யாம் பரமம்' என்றவர்கள் பதைப்பு ஒடுங்க,
அரனார், அழல் உரு ஆய், அங்கே, அளவு இறந்து,
பரம் ஆகி, நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ!

[12]
ஏழைத் தொழும்பனேன், எத்தனையோ காலம் எல்லாம்,
பாழுக்கு இறைத்தேன், பரம்பரனைப் பணியாதே;
ஊழி முதல், சிந்தாத நல் மணி, வந்து, என் பிறவித்
தாழைப் பறித்தவா தோள் நோக்கம் ஆடாமோ!

[13]
உரை மாண்ட உள் ஒளி உத்தமன் வந்து, உளம் புகலும்,
கரை மாண்ட காமப் பெரும் கடலைக் கடத்தலுமே,
இரை மாண்ட இந்திரியப் பறவை இரிந்து ஓட,
துரை மாண்டவா பாடி தோள் நோக்கம் ஆடாமோ!
. திருப்பொன் ஊசல்

[14]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.131   கண்டபத்து - இந்திரிய வயமயங்கி  
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தரவுகொச்சகக் கலிப்பா
இந்திரிய வயம் மயங்கி, இறப்பதற்கே காரணம் ஆய்,
அந்தரமே திரிந்து போய், அரு நரகில் வீழ்வேனைச்
சிந்தை தனைத் தெளிவித்து, சிவம் ஆக்கி, எனை ஆண்ட
அந்தம் இலா ஆனந்தம் அணி கொள் தில்லைக் கண்டேனே!

[1]
வினைப் பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டு,
தனைச் சிறிதும் நினையாதே, தளர்வு எய்திக் கிடப்பேனை,
எனைப் பெரிதும் ஆட்கொண்டு, என் பிறப்பு அறுத்த இணை இலியை
அனைத்து உலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேனே!

[2]
உருத் தெரியாக் காலத்தே, உள் புகுந்து, என் உளம் மன்னி,
கருத்து இருத்தி, ஊன் புக்கு, கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்துருத்தி மேயானை, தித்திக்கும் சிவபதத்தை
அருத்தியினால் நாய் அடியேன் அணிகொள் தில்லைக் கண்டேனே!

[3]
கல்லாத, புல் அறிவின் கடைப்பட்ட நாயேனை,
வல்லாளன் ஆய் வந்து, வனப்பு எய்தி இருக்கும்வண்ணம்,
பல்லோரும் காண, என்தன் பசுபாசம் அறுத்தானை
எல்லோரும் இறைஞ்சு தில்லை அம்பலத்தே கண்டேனே!

[4]
சாதி, குலம், பிறப்பு, என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதம் இலி நாயேனை, அல்லல் அறுத்து; ஆட்கொண்டு;
பேதை குணம், பிறர் உருவம், யான், எனது, என் உரை, மாய்த்து;
கோது இல் அமுது ஆனானை குலாவு தில்லைக் கண்டேனே!

[5]
பிறவி தனை அற மாற்றி; பிணி, மூப்பு, என்ற இவை இரண்டும்,
உறவினொடும், ஒழியச் சென்று; உலகு உடைய ஒரு முதலை
செறி பொழில் சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம்பலம் மன்னி,
மறையவரும், வானவரும், வணங்கிட நான் கண்டேனே!

[6]
பத்திமையும் பரிசும் இலாப் பசு பாசம் அறுத்தருளி,
பித்தன் இவன் என, என்னை ஆக்குவித்து, பேராமே,
சித்தம் எனும் திண் கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல் விளங்கு தில்லைக் கண்டேனே!

[7]
அளவு இலாப் பாவகத்தால் அமுக்கு உண்டு, இங்கு, அறிவு இன்றி,
விளைவு ஒன்றும் அறியாதே, வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு
அளவு இலா ஆனந்தம் அளித்து, என்னை ஆண்டானை
களவு இலா வானவரும் தொழும் தில்லைக் கண்டேனே!

[8]
பாங்கினொடு பரிசு ஒன்றும் அறியாத நாயேனை,
ஓங்கி, உளத்து, ஒளி வளர; உலப்பு இலா அன்பு அருளி;
வாங்கி, வினை; மலம் அறுத்து; வான் கருணை தந்தானை
நான்கு மறை பயில் தில்லை அம்பலத்தே கண்டேனே!

[9]
பூதங்கள் ஐந்து ஆகி, புலன் ஆகி, பொறி ஆகி,
பேதங்கள் அனைத்தும் ஆய், பேதம் இலாப் பெருமையனை,
கேதங்கள் கெடுத்து ஆண்ட கிளர் ஒளியை, மரகதத்தை
வேதங்கள் தொழுது ஏத்தும் விளங்கு தில்லைக் கண்டேனே!

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.138   திருவேசறவு - இரும்புதரு மனத்தேனை  
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கொச்சகக்கலிப்பா
இரும்பு தரு மனத்தேனை, ஈர்த்து, ஈர்த்து, என் என்பு உருக்கி,
கரும்பு தரு சுவை எனக்குக் காட்டினை உன் கழல் இணைகள்;
ஒருங்கு திரை உலவு சடை உடையானே! நரிகள் எல்லாம்
பெரும் குதிரை ஆக்கிய ஆறு அன்றே, உன் பேர் அருளே!

[1]
பண் ஆர்ந்த மொழி மங்கை பங்கா! நின் ஆள் ஆனார்க்கு
உண் ஆர்ந்த ஆர் அமுதே! உடையானே! அடியேனை
மண் ஆர்ந்த பிறப்பு அறுத்திட்டு ஆள்வாய், நீ வா' என்ன;
கண் ஆர உய்ந்த ஆறு அன்றே, உன் கழல் கண்டே!

[2]
ஆதம் இலி யான், பிறப்பு, இறப்பு, என்னும் அரு நரகில்,
ஆர் தமரும் இன்றியே, அழுந்துவேற்கு, ஆ! ஆ!' என்று,
ஓதம் மலி நஞ்சு உண்ட உடையானே! அடியேற்கு உன்
பாத மலர் காட்டிய ஆறு அன்றே, எம் பரம் பரனே!

[3]
பச்சைத் தாள் அரவு ஆட்டீ! படர் சடையாய்! பாத மலர்
உச்சத்தார் பெருமானே! அடியேனை உய்யக்கொண்டு,
எச்சத்து ஆர் சிறு தெய்வம் ஏத்தாதே, அச்சோ! என்
சித்தத்து ஆறு உய்ந்த ஆறு அன்றே, உன் திறம் நினைந்தே!

[4]
கற்று அறியேன் கலை ஞானம்; கசிந்து உருகேன்; ஆயிடினும்,
மற்று அறியேன் பிற தெய்வம்; வாக்கு இயலால், வார் கழல் வந்து
உற்று, இறுமாந்து இருந்தேன்; எம்பெருமானே! அடியேற்குப்
பொன் தவிசு நாய்க்கு இடும் ஆறு அன்றே, நின் பொன் அருளே!

[5]
பஞ்சு ஆய அடி மடவார் கடைக் கண்ணால், இடர்ப்பட்டு,
நஞ்சு ஆய துயர் கூர, நடுங்குவேன்; நின் அருளால்
உய்ஞ்சேன்; எம்பெருமானே! உடையானே! அடியேனை,
அஞ்சேல்,' என்று ஆண்ட ஆறு அன்றே, அம்பலத்து அமுதே!

[6]
என்பாலைப் பிறப்பு அறுத்து, இங்கு, இமையவர்க்கும் அறிய ஒண்ணா,
தென்பாலைத் திருப்பெருந்துறை உறையும் சிவபெருமான்,
அன்பால், நீ அகம் நெகவே புகுந்தருளி, ஆட்கொண்டது,
என்பாலே நோக்கிய ஆறு அன்றே, எம்பெருமானே!

[7]
மூத்தானே, மூவாத முதலானே, முடிவு இல்லா
ஒத்தானே, பொருளானே! உண்மையும் ஆய், இன்மையும் ஆய்,
பூத்தானே! புகுந்து இங்குப் புரள்வேனை, கருணையினால்
பேர்த்தே, நீ ஆண்ட ஆறு அன்றே, எம்பெருமானே!

[8]
மருவு இனிய மலர்ப் பாதம், மனத்தில் வளர்ந்து உள் உருக,
தெருவுதொறும் மிக அலறி, சிவபெருமான்' என்று ஏத்தி,
பருகிய நின் பரம் கருணைத் தடம் கடலில் படிவு ஆம் ஆறு,
அருள் எனக்கு, இங்கு இடைமருதே இடம் கொண்ட அம்மானே!

[9]
நானேயோ தவம் செய்தேன்? சிவாய நம' எனப் பெற்றேன்?
தேன் ஆய், இன் அமுதமும் ஆய், தித்திக்கும் சிவபெருமான்
தானே வந்து, எனது உள்ளம் புகுந்து, அடியேற்கு அருள் செய்தான்
ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே, வெறுத்திடவே!

[10]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list