சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8.110  
திருக்கோத்தும்பி - பூவேறு கோனும்
பண் - பூவேறு கோனும் புரந்தரனும் (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தரவுகொச்சகக் கலிப்பா
பூ ஏறு கோனும், புரந்தரனும், பொற்பு அமைந்த நா ஏறு செல்வியும், நாரணனும், நான்மறையும், மா ஏறு சோதியும், வானவரும், தாம் அறியாச் சே ஏறு சேவடிக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ! | [1] |
நான் ஆர்? என் உள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்? என்னை யார் அறிவார் வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்? மதி மயங்கி ஊன் ஆர் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன் தேன் ஆர் கமலமே சென்று ஊதாய்; கோத்தும்பீ! | [2] |
தினைத்தனை உள்ளது ஓர் பூவினில் தேன் உண்ணாதே, நினைத்தொறும், காண்தொறும், பேசும்தொறும், எப்போதும், அனைத்து எலும்பு உள் நெக, ஆனந்தத் தேன் சொரியும் குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ! | [3] |
கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின், என் அப்பன், என் ஒப்பு இல் என்னையும் ஆட்கொண்டருளி, வண்ணப் பணித்து, என்னை வா' என்ற வான் கருணைச் சுண்ணப் பொன் நீற்றற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ! | [4] |
அத் தேவர் தேவர்; அவர் தேவர்;' என்று, இங்ஙன், பொய்த் தேவு பேசி, புலம்புகின்ற பூதலத்தே, பத்து ஏதும் இல்லாது, என் பற்று அற, நான் பற்றிநின்ற மெய்த் தேவர் தேவற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ! | [5] |
வைத்த நிதி, பெண்டிர், மக்கள், குலம், கல்வி, என்னும் பித்த உலகில், பிறப்போடு இறப்பு, என்னும் சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த வித்தகத் தேவற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ! | [6] |
சட்டோ நினைக்க, மனத்து அமுது ஆம் சங்கரனை, கெட்டேன், மறப்பேனோ? கேடுபடாத் திருவடியை ஒட்டாத பாவித் தொழும்பரை நாம் உரு அறியோம்; சிட்டாய சிட்டற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ! | [7] |
ஒன்று ஆய், முளைத்து, எழுந்து, எத்தனையோ கவடு விட்டு, நன்று ஆக வைத்து, என்னை நாய் சிவிகை ஏற்றுவித்த என் தாதை; தாதைக்கும், எம் அனைக்கும், தம் பெருமான்! குன்றாத செல்வற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ! | [8] |
கரணங்கள் எல்லாம் கடந்துநின்ற கறை மிடற்றன் சரணங்களே சென்று சார்தலுமே, தான் எனக்கு மரணம், பிறப்பு, என்று, இவை இரண்டின் மயக்கு அறுத்த கருணைக் கடலுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ! | [9] |
நோய் உற்று, மூத்து, நான் நுந்து கன்றாய் இங்கு இருந்து, நாய் உற்ற செல்வம் நயந்து அறியாவண்ணம் எல்லாம், தாய் உற்று வந்து, என்னை ஆண்டுகொண்ட தன் கருணைத் தேய் உற்ற செல்வற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ! | [10] |
வல் நெஞ்சக் கள்வன், மன வலியன்,' என்னாதே, கல் நெஞ்சு உருக்கி, கருணையினால் ஆண்டுகொண்ட, அன்னம் திளைக்கும் அணி தில்லை அம்பலவன் பொன் அம் கழலுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ! | [11] |
நாயேனைத் தன் அடிகள் பாடுவித்த நாயகனை, பேயேனது உள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனை, சீ ஏதும் இல்லாது என் செய் பணிகள் கொண்டருளும் தாய் ஆன ஈசற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ! | [12] |
நான் தனக்கு அன்பு இன்மை, நானும், தானும், அறிவோம்; தான் என்னை ஆட்கொண்டது எல்லாரும் தாம் அறிவார்; ஆன கருணையும் அங்கு உற்றே தான்; அவனே கோன் என்னைக் கூட குளிர்ந்து ஊதாய்; கோத்தும்பீ! | [13] |
கரு ஆய், உலகினுக்கு அப்புறம் ஆய், இப் புறத்தே மரு ஆர் மலர்க் குழல் மாதினொடும் வந்தருளி, அரு ஆய், மறை பயில் அந்தணன் ஆய், ஆண்டுகொண்ட திரு ஆன தேவற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ! | [14] |
நானும், என் சிந்தையும், நாயகனுக்கு எவ் இடத்தோம் தானும், தன் தையலும், தாழ் சடையோன் ஆண்டிலனேல்? வானும், திசைகளும், மா கடலும், ஆய பிரான் தேன் உந்து சேவடிக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ! | [15] |
உள்ளப்படாத திருஉருவை உள்ளுதலும், கள்ளப்படாத களிவந்த வான் கருணை வெள்ளப் பிரான், எம்பிரான், என்னை வேறே ஆட் கொள் அப் பிரானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ! | [16] |
பொய் ஆய செல்வத்தே புக்கு, அழுந்தி, நாள்தோறும் மெய்யாக் கருதிக் கிடந்தேனை, ஆட்கொண்ட ஐயா! என் ஆர் உயிரே! அம்பலவா! என்று, அவன் தன் செய் ஆர் மலர் அடிக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ! | [17] |
தோலும், துகிலும்; குழையும், சுருள் தோடும்; பால் வெள்ளை நீறும், பசும் சாந்தும்; பைங் கிளியும், சூலமும்; தொக்க வளையும்; உடைத் தொன்மைக் கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய்; கோத்தும்பீ! | [18] |
கள்வன், கடியன், கலதி, இவன்' என்னாதே, வள்ளல், வரவர வந்து ஒழிந்தான் என் மனத்தே; உள்ளத்து உறு துயர், ஒன்று ஒழியாவண்ணம், எல்லாம் தெள்ளும் கழலுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ! | [19] |
பூ மேல் அயனோடு மாலும் புகல் அரிது என்று ஏமாறி நிற்க, அடியேன் இறுமாக்க, நாய் மேல் தவிசு இட்டு, நன்றாப் பொருட்படுத்த தீ மேனியானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ! | [20] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8.111  
திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச்
பண் - பூவேறு கோனும் புரந்தரனும் (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தரவுகொச்சகக் கலிப்பா
திருமாலும் | பன்றியாய்ச் | சென்று உணராத் | திருவடியை, உரு நாம் | அறிய, ஓர் | அந்தணன் ஆய், | ஆண்டுகொண்டான்; ஒரு நாமம், | ஓர் உருவம், | ஒன்றும் இல்லாற்கு,| ஆயிரம் திருநாமம் | பாடி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ! | [1] |
திரு ஆர் | பெருந்துறை | மேய பிரான் | என் பிறவிக் கரு வேர் | அறுத்தபின், | யாவரையும் | கண்டது இல்லை; அரு ஆய்,| உருவமும் | ஆய பிரான், | அவன் மருவும் திருவாரூர் | பாடி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ! | [2] |
அரிக்கும்,| பிரமற்கும்,| அல்லாத |தேவர்கட்கும், தெரிக்கும் | படித்து அன்றி | நின்ற சிவம், | வந்து, நம்மை உருக்கும், | பணி கொள்ளும், | என்பது கேட்டு, | உலகம் எல்லாம் சிரிக்கும் | திறம் பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ! | [3] |
அவம் ஆய | தேவர் | அவ கதியில் | அழுந்தாமே பவ மாயம் | காத்து, என்னை | ஆண்டுகொண்ட | பரஞ்சோதி நவம் ஆய | செம் சுடர் | நல்குதலும், | நாம் ஒழிந்து, சிவம் ஆன | வா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ! | [4] |
அருமந்த | தேவர், | அயன், திருமாற்கு, | அரிய சிவம் உருவந்து, | பூதலத்தோர் | உகப்பு எய்த, | கொண்டருளி, கரு வெந்து | வீழக் | கடைக்கணித்து, என் | உளம் புகுந்த திரு வந்த | வா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ! | [5] |
அரை ஆடு | நாகம் | அசைத்த பிரான், | அவனியின்மேல், வரை ஆடு | மங்கை தன் | பங்கொடும், வந்து, | ஆண்ட திறம் உரை ஆட, | உள் ஒளி ஆட, | ஒள் மா மலர்க் | கண்களில் நீர் திரை ஆடு | மா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ! | [6] |
ஆ! ஆ! | அரி, அயன், | இந்திரன், வானோர்க்கு, | அரிய சிவன், வா, வா| என்று, என்னையும் | பூதலத்தே |வலிந்து ஆண்டுகொண்டான்; பூ ஆர் | அடிச் சுவடு | என் தலைமேல் | பொறித்தலுமே, தே ஆன | வா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ! | [7] |
கறங்கு ஓலை | போல்வதுஓர் | காயப் பிறப்போடு | இறப்பு என்னும், அறம், பாவம், | என்று இரண்டு | அச்சம் தவிர்த்து, என்னை | ஆண்டுகொண்டான்; மறந்தேயும் | தன் கழல் நான் | மறவாவண்ணம் | நல்கிய, அத் திறம் பாடல் | பாடி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ! | [8] |
கல் நார் | உரித்து என்ன, | என்னையும் | தன் கருணையினால் பொன் ஆர் | கழல் பணித்து, | ஆண்ட பிரான் | புகழ் பாடி, மின் நேர் | நுடங்கு இடை, | செம் துவர் வாய், | வெள் நகையீர்! தென்னா, தென்னா | என்று தெள்ளேணம் | கொட்டாமோ! | [9] |
கனவேயும் | தேவர்கள் | காண்பு அரிய | கனை கழலோன் புன வேய் | அன வளைத் | தோளியொடும் | புகுந்தருளி, நனவே | எனைப் பிடித்து, ஆட்கொண்டவா | நயந்து, நெஞ்சம், சின வேல் கண் | நீர் மல்க | தெள்ளேணம் | கொட்டாமோ! | [10] |
கயல் மாண்ட | கண்ணி தன் | பங்கன் எனைக் | கலந்து ஆண்டலுமே, அயல் மாண்டு, | அருவினைச் | சுற்றமும் மாண்டு, | அவனியின்மேல் மயல் மாண்டு, | மற்று உள்ள | வாசகம் மாண்டு, | என்னுடைய செயல் மாண்ட | வா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ! | [11] |
முத்திக்கு | உழன்று | முனிவர் குழாம் | நனி வாட, அத்திக்கு | அருளி, | அடியேனை | ஆண்டுகொண்டு, பத்திக் | கடலுள் | பதித்த | பரஞ்சோதி, தித்திக்கு | மா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ! | [12] |
பார் பாடும், | பாதாளர் | பாடும், விண்ணோர் | தம் பாடும், ஆர் பாடும், | சாரா | வகை அருளி, | ஆண்டுகொண்ட நேர் பாடல் | பாடி, | நினைப்பு அரிய | தனிப் பெரியோன் சீர் பாடல் | பாடி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ! | [13] |
மாலே, | பிரமனே, மற்று ஒழிந்த | தேவர்களே, நூலே, | நுழைவுஅரிய | நுண்ணியன் ஆய், | வந்து, அடியேன் பாலே | புகுந்து, | பரிந்து உருக்கும் | பாவகத்தால், சேல் ஏர் | கண் நீர் மல்க | தெள்ளேணம் | கொட்டாமோ! | [14] |
உருகிப் | பெருகி, | உளம் குளிர | முகந்துகொண்டு, பருகற்கு | இனிய | பரம் கருணைத் | தடம் கடலை மருவி, | திகழ் தென்னன் | வார் கழலே | நினைந்து, அடியோம் திருவைப் | பரவி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ! | [15] |
புத்தன், | புரந்தர ஆதியர், | அயன், மால், | போற்றி செயும் பித்தன்; | பெருந்துறை | மேய பிரான்; | பிறப்பு அறுத்த அத்தன்; | அணி தில்லை | அம்பலவன்; | அருள் கழல்கள் சித்தம் | புகுந்தவா | தெள்ளேணம் | கொட்டாமோ! | [16] |
உவலைச் | சமயங்கள், | ஒவ்வாத | சாத்திரம், ஆம் சவலைக் | கடல் உளனாய்க் | கிடந்து, | தடுமாறும் கவலைக் | கெடுத்து, | கழல் இணைகள் | தந்தருளும் செயலைப் | பரவி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ! | [17] |
வான் கெட்டு | மாருதம் | மாய்ந்து, அழல், நீர், | மண், கெடினும், தான் கெட்டல் | இன்றி, | சலிப்பு அறியாத் | தன்மையனுக்கு, ஊன் கெட்டு, | உயிர் கெட்டு, | உணர்வு கெட்டு, என் | உள்ளமும் போய், நான் கெட்ட | வா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ! | [18] |
விண்ணோர் | முழு முதல்; | பாதாளத் | தார் வித்து; மண்ணோர் | மருந்து; அயன், | மால், உடைய | வைப்பு; அடியோம் கண் ஆர, | வந்துநின்றான்; | கருணைக் | கழல் பாடி, தென்னா, தென்னா | என்று தெள்ளேணம் | கொட்டாமோ! | [19] |
குலம் பாடி | , கொக்கு இறகும் | பாடி, | கோல் வளையாள் நலம் பாடி, | நஞ்சு உண்ட | வா பாடி, | நாள்தோறும் அலம்பு ஆர் | புனல் தில்லை | அம்பலத்தே | ஆடுகின்ற சிலம்பு ஆடல் | பாடி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ! | [20] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8.112  
திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு
பண் - பூவேறு கோனும் புரந்தரனும் (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தரவுகொச்சகக் கலிப்பா
திக்குவாய் மாறிச் சீர் பெறுவதற்கும் , சிறந்த பேச்சாளர் ஆவதற்க்கும் ஓதவேண்டிய பதிகம்
பூசுவதும் வெள் நீறு, பூண்பதுவும் பொங்கு அரவம், பேசுவதும் திருவாயால் மறை போலும்? காண், ஏடீ! பூசுவதும், பேசுவதும், பூண்பதுவும், கொண்டு என்னை? ஈசன் அவன் எவ் உயிர்க்கும் இயல்பு ஆனான்; சாழலோ! | [1] |
என் அப்பன், எம்பிரான், எல்லார்க்கும் தான் ஈசன்; துன்னம் பெய் கோவணமாக் கொள்ளும்அது என்? ஏடீ! மன்னு கலை, துன்னு பொருள் மறை நான்கே, வான் சரடா, தன்னையே கோவணமா, சாத்தினன், காண்; சாழலோ! | [2] |
கோயில் சுடுகாடு, கொல் புலித் தோல் நல் ஆடை, தாயும் இலி, தந்தை இலி, தான் தனியன் காண்; ஏடீ! தாயும் இலி, தந்தை இலி, தான் தனியன்; ஆயிடினும், காயில், உலகு அனைத்தும் கல் பொடி, காண்; சாழலோ! | [3] |
அயனை, அனங்கனை, அந்தகனை, சந்திரனை, வயனங்கள் மாயா வடுச் செய்தான்; காண், ஏடீ! நயனங்கள் மூன்று உடைய நாயகனே தண்டித்தால், சயம் அன்றோ வானவர்க்கு, தாழ் குழலாய்? சாழலோ! | [4] |
தக்கனையும், எச்சனையும், தலை அறுத்து, தேவர் கணம் தொக்கென வந்தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்? ஏடீ! தொக்கென வந்தவர் தம்மைத் தொலைத்தருளி அருள் கொடுத்து, அங்கு எச்சனுக்கு மிகைத் தலை மற்று அருளினன், காண்; சாழலோ! | [5] |
அலரவனும், மாலவனும், அறியாமே, அழல் உரு ஆய், நிலம் முதல், கீழ் அண்டம் உற, நின்றதுதான் என்? ஏடீ! நிலம் முதல், கீழ் அண்டம் உற, நின்றிலனேல் இருவரும் தம் சலம் முகத்தால் ஆங்காரம் தவிரார் காண் சாழலோ! | [6] |
மலை மகளை ஒரு பாகம் வைத்தலுமே மற்று ஒருத்தி சலம் முகத்தால் அவன் சடையில் பாயும் அது என் ஏடீ சலம் முகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல் தரணி எல்லாம் பில முகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடு ஆம் சாழலோ! | [7] |
கோலாலம் ஆகிக் குரை கடல்வாய் அன்று எழுந்த ஆலாலம் உண்டான் அவன் சதுர் தான் என் ஏடீ ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன் மால் உள்ளிட்ட மேல் ஆய தேவர் எல்லாம் வீடுவர் காண் சாழலோ! | [8] |
தென் பால் உகந்து ஆடும் தில்லைச் சிற்றம்பலவன் பெண் பால் உகந்தான்; பெரும் பித்தன், காண்; ஏடீ! பெண் பால் உகந்திலனேல், பேதாய்! இரு நிலத்தோர் விண் பால் யோகு எய்தி, வீடுவர், காண்; சாழலோ! | [9] |
தான் அந்தம் இல்லான், தனை அடைந்த நாயேனை ஆனந்த வெள்ளத்து அழுந்துவித்தான், காண்; ஏடீ! ஆனந்த வெள்ளத்து அழுந்துவித்த திருவடிகள், வான் உந்து தேவர்கட்கு ஓர் வான் பொருள், காண்; சாழலோ! | [10] |
நங்காய்! இது என்ன தவம்? நரம்போடு, எலும்பு, அணிந்து, கங்காளம் தோள்மேலே காதலித்தான், காண்; ஏடீ! கங்காளம் ஆமா கேள்; கால அந்தரத்து இருவர் தம் காலம் செய்யத் தரித்தனன், காண்; சாழலோ! | [11] |
கான் ஆர் புலித் தோல் உடை; தலை ஊண்; காடு பதி; ஆனால், அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆர்? ஏடீ! ஆனாலும், கேளாய்; அயனும் திருமாலும், வான் நாடர் கோவும், வழி அடியார்; சாழலோ! | [12] |
மலை அரையன் பொன் பாவை, வாள் நுதலாள், பெண் திருவை உலகு அறிய, தீ வேட்டான் என்னும்அது என்? ஏடீ உலகு அறிய, தீ வேளாது ஒழிந்தனனேல், உலகு அனைத்தும், கலை நவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடும், காண்; சாழலோ! | [13] |
தேன் புக்க தண் பணை சூழ் தில்லைச் சிற்றம்பலவன், தான் புக்கு நட்டம் பயிலும்அது என்? ஏடீ! தான் புக்கு நட்டம் பயின்றிலனேல், தரணி எல்லாம், ஊன் புக்க வேல் காளிக்கு ஊட்டு ஆம், காண்; சாழலோ! | [14] |
கட கரியும், பரி மாவும், தேரும், உகந்து ஏறாதே, இடபம் உகந்து ஏறிய ஆறு, எனக்கு அறிய இயம்பு; ஏடீ! தட மதில்கள் அவை மூன்றும் தழல் எரித்த அந் நாளில் இடபம் அது ஆய்த் தாங்கினான் திருமால், காண்; சாழலோ! | [15] |
நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை, அன்று, ஆலின் கீழ் இருந்து, அங்கு, அறம் உரைத்தான், காண்; ஏடீ! அன்று, ஆலின் கீழ் இருந்து, அங்கு, அறம் உரைத்தான், ஆயிடினும், கொன்றான், காண், புரம் மூன்றும் கூட்டோடே; சாழலோ! | [16] |
அம்பலத்தே கூத்து ஆடி, அமுது செய்யப் பலி திரியும் நம்பனையும் தேவன் என்று நண்ணும்அது என்? ஏடீ! நம்பனையும் ஆமா கேள்; நான்மறைகள் தாம் அறியா, எம்பெருமான், ஈசா' என்று ஏத்தின, காண்; சாழலோ! | [17] |
சலம் உடைய சலந்தரன் தன் உடல் தடிந்த நல் ஆழி, நலம் உடைய நாரணற்கு, அன்று, அருளிய ஆறு என்? ஏடீ! நலம் உடைய நாரணன், தன் நயனம் இடந்து, அரன் அடிக்கீழ் அலர் ஆக இட, ஆழி அருளினன், காண்; சாழலோ! | [18] |
அம்பரம் ஆம், புள்ளித் தோல்; ஆலாலம், ஆர் அமுதம்; எம்பெருமான் உண்ட சதிர், எனக்கு அறிய இயம்புல் ஏடீ! எம்பெருமான் ஏது உடுத்து, அங்கு ஏது அமுது செய்திடினும், தம் பெருமை தான் அறியாத் தன்மையன், காண்; சாழலோ! | [19] |
அரும் தவருக்கு, ஆலின் கீழ், அறம் முதலா நான்கினையும் இருந்து, அவருக்கு அருளும்அது எனக்கு அறிய இயம்பு; ஏடீ! அரும் தவருக்கு, அறம் முதல் நான்கு அன்று அருளிச்செய்திலனேல், திருந்த, அவருக்கு, உலகு இயற்கை தெரியா, காண்; சாழலோ! | [20] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8.113  
திருப்பூவல்லி - இணையார் திருவடி
பண் - பூவேறு கோனும் புரந்தரனும் (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தரவுகொச்சகக் கலிப்பா
இணை ஆர் திருவடி என் தலைமேல் வைத்தலுமே, துணை ஆன சுற்றங்கள் அத்தனையும், துறந்தொழிந்தேன்; அணை ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற புணையாளன் சீர் பாடி பூவல்லி கொய்யாமோ! | [1] |
எந்தை, எம் தாய், சுற்றம், மற்றும் எல்லாம், என்னுடைய பந்தம் அறுத்து, என்னை ஆண்டுகொண்ட பாண்டிப் பிரான்; அந்த இடைமருதில், ஆனந்தத் தேன் இருந்த பொந்தைப் பரவி, நாம் பூவல்லி கொய்யாமோ! | [2] |
நாயின் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்து, தாயின் பெரிதும் தயா உடைய தம் பெருமான், மாயப் பிறப்பு அறுத்து, ஆண்டான்; என் வல் வினையின் வாயில் பொடி அட்டி பூவல்லி கொய்யாமோ! | [3] |
பண் பட்ட தில்லைப் பதிக்கு அரசைப் பரவாதே, எண் பட்ட தக்கன், அருக்கன், எச்சன், இந்து, அனல், விண் பட்ட பூதப் படை வீரபத்திரரால் புண் பட்டவா பாடி பூவல்லி கொய்யாமோ! | [4] |
தேன் ஆடு கொன்றை சடைக்கு அணிந்த சிவபெருமான் ஊன் நாடி, நாடி வந்து, உட்புகுந்தான்; உலகர் முன்னே நான் ஆடி ஆடி நின்று, ஓலம் இட, நடம் பயிலும் வான் நாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ! | [5] |
எரி மூன்று தேவர்க்கு இரங்கி, அருள்செய்தருளி, சிரம் மூன்று அற, தன் திருப் புருவம் நெரித்தருளி, உரு மூன்றும் ஆகி, உணர்வு அரிது ஆம் ஒருவனுமே புரம் மூன்று எரித்தவா பூவல்லி கொய்யாமோ! | [6] |
வணங்க, தலை வைத்து; வார் கழல், வாய், வாழ்த்த வைத்து; இணங்க, தன் சீர் அடியார் கூட்டமும் வைத்து; எம்பெருமான், அணங்கோடு அணி தில்லை அம்பலத்தே, ஆடுகின்ற குணம் கூர, பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ! | [7] |
நெறி செய்தருளி, தன் சீர் அடியார் பொன் அடிக்கே குறி செய்துகொண்டு, என்னை ஆண்ட பிரான் குணம் பரவி, முறி செய்து, நம்மை முழுது உழற்றும் பழ வினையைக் கிறி செய்தவா பாடி பூவல்லி கொய்யாமோ! | [8] |
பல் நாள் பரவிப் பணி செய்ய, பாத மலர் என் ஆகம் துன்னவைத்த பெரியோன், எழில் சுடர் ஆய், கல் நார் உரித்து, என்னை ஆண்டுகொண்டான்; கழல் இணைகள் பொன் ஆனவா பாடி பூவல்லி கொய்யாமோ! | [9] |
பேர் ஆசை ஆம் இந்தப் பிண்டம் அற, பெருந்துறையான், சீர் ஆர் திருவடி என் தலைமேல் வைத்த பிரான், கார் ஆர் கடல் நஞ்சை உண்டு உகந்த காபாலி, போர் ஆர் புரம் பாடி பூவல்லி கொய்யாமோ! | [10] |
பாலும், அமுதமும், தேனுடன், ஆம் பரா பரம் ஆய், கோலம் குளிர்ந்து, உள்ளம் கொண்ட பிரான் குரை கழல்கள் ஞாலம் பரவுவார் நல் நெறி ஆம்; அந் நெறியே போலும் புகழ் பாடி பூவல்லி கொய்யாமோ! | [11] |
வானவன், மால், அயன், மற்றும் உள்ள தேவர்கட்கும் கோன் அவன் ஆய் நின்று, கூடல் இலாக் குணக் குறியோன் ஆன நெடும் கடல் ஆலாலம் அமுது செய்ய, போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ! | [12] |
அன்று, ஆல நீழல் கீழ் அரு மறைகள், தான் அருளி, நன்று ஆக வானவர், மா முனிவர், நாள்தோறும், நின்று, ஆர ஏத்தும் நிறை கழலோன், புனை கொன்றைப் பொன் தாது பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ! | [13] |
படம் ஆக, என் உள்ளே தன் இணைப் போது அவை அளித்து, இங்கு இடம் ஆகக் கொண்டிருந்த, ஏகம்பம் மேய பிரான், தடம் ஆர் மதில் தில்லை அம்பலமே தான் இடமா, நடம் ஆடுமா பாடி பூவல்லி கொய்யாமோ! | [14] |
அங்கி, அருக்கன், இராவணன், அந்தகன், கூற்றன், செம் கண் அரி, அயன், இந்திரனும், சந்திரனும், பங்கம் இல் தக்கனும், எச்சனும், தம் பரிசு அழிய, பொங்கிய சீர் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ! | [15] |
திண் போர் விடையான், சிவபுரத்தார் போர் ஏறு, மண்பால், மதுரையில் பிட்டு அமுது செய்தருளி, தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட, புண் பாடல் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ! | [16] |
முன் ஆய மால் அயனும், வானவரும், தானவரும், பொன் ஆர் திருவடி தாம் அறியார்; போற்றுவதே? என் ஆகம் உள் புகுந்து ஆண்டுகொண்டான் இலங்கு அணியாம் பல் நாகம் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ! | [17] |
சீர் ஆர் திருவடித் திண் சிலம்பு சிலம்பு ஒலிக்கே ஆராத ஆசை அது ஆய், அடியேன் அகம் மகிழ, தேர் ஆர்ந்த வீதிப் பெருந்துறையான் திரு நடம் செய் பேரானந்தம் பாடி பூவல்லி கொய்யாமோ! | [18] |
அத்தி உரித்து, அது போர்த்தருளும் பெருந்துறையான், பித்த வடிவு கொண்டு, இவ் உலகில் பிள்ளையும் ஆய், முத்தி முழு முதல், உத்தரகோசமங்கை வள்ளல், புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ! | [19] |
மா ஆர வேறி மதுரைநகர் புகுந்தருளித் தேவார்ந்த கோலத் திகழப் பெருந்துறையான் கோவாகி வந்தெம்மைக் குற்றேவல் கொண்டருளும் பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ | [20] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8.115  
திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப்
பண் - பூவேறு கோனும் புரந்தரனும் (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தரவுகொச்சகக் கலிப்பா
பூத்து ஆரும் பொய்கைப் புனல் இதுவே, எனக் கருதி, பேய்த்தேர் முகக்க உறும் பேதை குணம் ஆகாமே, தீர்த்தாய்; திகழ் தில்லை அம்பலத்தே திரு நடம் செய் கூத்தா! உன் சேவடி கூடும்வண்ணம் தோள் நோக்கம்! | [1] |
என்றும் பிறந்து, இறந்து, ஆழாமே, ஆண்டுகொண்டான்; கன்றால் விளவு எறிந்தான், பிரமன், காண்பு அரிய குன்றாத சீர்த் தில்லை அம்பலவன்; குணம் பரவி, துன்று ஆர் குழலினீர்! தோள் நோக்கம் ஆடாமோ! | [2] |
பொருள் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்க, செருப்பு உற்ற சீர் அடி, வாய்க் கலசம், ஊன் அமுதம், விருப்பு உற்று, வேடனார் சேடு எறிய மெய் குளிர்ந்து, அங்கு, அருள் பெற்று, நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ! | [3] |
கல் போலும் நெஞ்சம் கசிந்து உருக, கருணையினால் நிற்பானைப் போல, என் நெஞ்சின் உள்ளே புகுந்தருளி, நல் பால் படுத்து என்னை, நாடு அறியத் தான் இங்ஙன், சொல் பாலது ஆனவா தோள் நோக்கம் ஆடாமோ! | [4] |
நிலம், நீர், நெருப்பு, உயிர், நீள் விசும்பு, நிலா, பகலோன், புலன் ஆய மைந்தனோடு, எண் வகையாய்ப் புணர்ந்துநின்றான்; உலகு ஏழ் என, திசை பத்து என, தான் ஒருவனுமே பல ஆகி, நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ! | [5] |
புத்தன் முதல் ஆய புல் அறிவின் பல் சமயம், தம் தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டு நிற்க, சித்தம் சிவம் ஆக்கி, செய்தனவே தவம் ஆக்கும் அத்தன் கருணையினால் தோள் நோக்கம் ஆடாமோ! | [6] |
தீது இல்லை மாணி, சிவ கருமம் சிதைத்தானை, சாதியும் வேதியன், தாதை தனை, தாள் இரண்டும் சேதிப்ப, ஈசன் திருவருளால் தேவர் தொழ, பாதகமே சோறு பற்றினவா தோள் நோக்கம்! | [7] |
மானம் அழிந்தோம்; மதி மறந்தோம்; மங்கைநல்லீர்! வானம் தொழும் தென்னன் வார் கழலே நினைந்து, அடியோம், ஆனந்தக் கூத்தன் அருள் பெறின், நாம் அவ்வணமே ஆனந்தம் ஆகி, நின்று ஆடாமோ தோள் நோக்கம்! | [8] |
எண் உடை மூவர் இராக்கதர்கள், எரி பிழைத்து, கண் நுதல் எந்தை கடைத்தலைமுன் நின்றதன் பின், எண் இலி இந்திரர், எத்தனையோ பிரமர்களும், மண்மிசை மால் பலர், மாண்டனர்; காண் தோள் நோக்கம்! | [9] |
பங்கயம் ஆயிரம் பூவினில், ஓர் பூக் குறைய, தம் கண் இடந்து, அரன் சேவடிமேல் சாத்தலுமே, சங்கரன், எம் பிரான், சக்கரம் மாற்கு அருளிய ஆறு, எங்கும் பரவி, நாம் தோள் நோக்கம் ஆடாமோ! | [10] |
காமன் உடல்; உயிர், காலன்; பல், காய் கதிரோன்; நா மகள் நாசி; சிரம், பிரமன்; கரம், எரியை; சோமன் கலை; தலை தக்கனையும், எச்சனையும்; தூய்மைகள் செய்தவா தோள் நோக்கம் ஆடாமோ! | [11] |
பிரமன், அரி, என்ற இருவரும், தம் பேதைமையால் பரமம், யாம் பரமம்' என்றவர்கள் பதைப்பு ஒடுங்க, அரனார், அழல் உரு ஆய், அங்கே, அளவு இறந்து, பரம் ஆகி, நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ! | [12] |
ஏழைத் தொழும்பனேன், எத்தனையோ காலம் எல்லாம், பாழுக்கு இறைத்தேன், பரம்பரனைப் பணியாதே; ஊழி முதல், சிந்தாத நல் மணி, வந்து, என் பிறவித் தாழைப் பறித்தவா தோள் நோக்கம் ஆடாமோ! | [13] |
உரை மாண்ட உள் ஒளி உத்தமன் வந்து, உளம் புகலும், கரை மாண்ட காமப் பெரும் கடலைக் கடத்தலுமே, இரை மாண்ட இந்திரியப் பறவை இரிந்து ஓட, துரை மாண்டவா பாடி தோள் நோக்கம் ஆடாமோ! . திருப்பொன் ஊசல் | [14] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8.131  
கண்டபத்து - இந்திரிய வயமயங்கி
பண் - பூவேறு கோனும் புரந்தரனும் (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தரவுகொச்சகக் கலிப்பா
இந்திரிய வயம் மயங்கி, இறப்பதற்கே காரணம் ஆய், அந்தரமே திரிந்து போய், அரு நரகில் வீழ்வேனைச் சிந்தை தனைத் தெளிவித்து, சிவம் ஆக்கி, எனை ஆண்ட அந்தம் இலா ஆனந்தம் அணி கொள் தில்லைக் கண்டேனே! | [1] |
வினைப் பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டு, தனைச் சிறிதும் நினையாதே, தளர்வு எய்திக் கிடப்பேனை, எனைப் பெரிதும் ஆட்கொண்டு, என் பிறப்பு அறுத்த இணை இலியை அனைத்து உலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேனே! | [2] |
உருத் தெரியாக் காலத்தே, உள் புகுந்து, என் உளம் மன்னி, கருத்து இருத்தி, ஊன் புக்கு, கருணையினால் ஆண்டுகொண்ட திருத்துருத்தி மேயானை, தித்திக்கும் சிவபதத்தை அருத்தியினால் நாய் அடியேன் அணிகொள் தில்லைக் கண்டேனே! | [3] |
கல்லாத, புல் அறிவின் கடைப்பட்ட நாயேனை, வல்லாளன் ஆய் வந்து, வனப்பு எய்தி இருக்கும்வண்ணம், பல்லோரும் காண, என்தன் பசுபாசம் அறுத்தானை எல்லோரும் இறைஞ்சு தில்லை அம்பலத்தே கண்டேனே! | [4] |
சாதி, குலம், பிறப்பு, என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதம் இலி நாயேனை, அல்லல் அறுத்து; ஆட்கொண்டு; பேதை குணம், பிறர் உருவம், யான், எனது, என் உரை, மாய்த்து; கோது இல் அமுது ஆனானை குலாவு தில்லைக் கண்டேனே! | [5] |
பிறவி தனை அற மாற்றி; பிணி, மூப்பு, என்ற இவை இரண்டும், உறவினொடும், ஒழியச் சென்று; உலகு உடைய ஒரு முதலை செறி பொழில் சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம்பலம் மன்னி, மறையவரும், வானவரும், வணங்கிட நான் கண்டேனே! | [6] |
பத்திமையும் பரிசும் இலாப் பசு பாசம் அறுத்தருளி, பித்தன் இவன் என, என்னை ஆக்குவித்து, பேராமே, சித்தம் எனும் திண் கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த வித்தகனார் விளையாடல் விளங்கு தில்லைக் கண்டேனே! | [7] |
அளவு இலாப் பாவகத்தால் அமுக்கு உண்டு, இங்கு, அறிவு இன்றி, விளைவு ஒன்றும் அறியாதே, வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு அளவு இலா ஆனந்தம் அளித்து, என்னை ஆண்டானை களவு இலா வானவரும் தொழும் தில்லைக் கண்டேனே! | [8] |
பாங்கினொடு பரிசு ஒன்றும் அறியாத நாயேனை, ஓங்கி, உளத்து, ஒளி வளர; உலப்பு இலா அன்பு அருளி; வாங்கி, வினை; மலம் அறுத்து; வான் கருணை தந்தானை நான்கு மறை பயில் தில்லை அம்பலத்தே கண்டேனே! | [9] |
பூதங்கள் ஐந்து ஆகி, புலன் ஆகி, பொறி ஆகி, பேதங்கள் அனைத்தும் ஆய், பேதம் இலாப் பெருமையனை, கேதங்கள் கெடுத்து ஆண்ட கிளர் ஒளியை, மரகதத்தை வேதங்கள் தொழுது ஏத்தும் விளங்கு தில்லைக் கண்டேனே! | [10] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8.138  
திருவேசறவு - இரும்புதரு மனத்தேனை
பண் - பூவேறு கோனும் புரந்தரனும் (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கொச்சகக்கலிப்பா
இரும்பு தரு மனத்தேனை, ஈர்த்து, ஈர்த்து, என் என்பு உருக்கி, கரும்பு தரு சுவை எனக்குக் காட்டினை உன் கழல் இணைகள்; ஒருங்கு திரை உலவு சடை உடையானே! நரிகள் எல்லாம் பெரும் குதிரை ஆக்கிய ஆறு அன்றே, உன் பேர் அருளே! | [1] |
பண் ஆர்ந்த மொழி மங்கை பங்கா! நின் ஆள் ஆனார்க்கு உண் ஆர்ந்த ஆர் அமுதே! உடையானே! அடியேனை மண் ஆர்ந்த பிறப்பு அறுத்திட்டு ஆள்வாய், நீ வா' என்ன; கண் ஆர உய்ந்த ஆறு அன்றே, உன் கழல் கண்டே! | [2] |
ஆதம் இலி யான், பிறப்பு, இறப்பு, என்னும் அரு நரகில், ஆர் தமரும் இன்றியே, அழுந்துவேற்கு, ஆ! ஆ!' என்று, ஓதம் மலி நஞ்சு உண்ட உடையானே! அடியேற்கு உன் பாத மலர் காட்டிய ஆறு அன்றே, எம் பரம் பரனே! | [3] |
பச்சைத் தாள் அரவு ஆட்டீ! படர் சடையாய்! பாத மலர் உச்சத்தார் பெருமானே! அடியேனை உய்யக்கொண்டு, எச்சத்து ஆர் சிறு தெய்வம் ஏத்தாதே, அச்சோ! என் சித்தத்து ஆறு உய்ந்த ஆறு அன்றே, உன் திறம் நினைந்தே! | [4] |
கற்று அறியேன் கலை ஞானம்; கசிந்து உருகேன்; ஆயிடினும், மற்று அறியேன் பிற தெய்வம்; வாக்கு இயலால், வார் கழல் வந்து உற்று, இறுமாந்து இருந்தேன்; எம்பெருமானே! அடியேற்குப் பொன் தவிசு நாய்க்கு இடும் ஆறு அன்றே, நின் பொன் அருளே! | [5] |
பஞ்சு ஆய அடி மடவார் கடைக் கண்ணால், இடர்ப்பட்டு, நஞ்சு ஆய துயர் கூர, நடுங்குவேன்; நின் அருளால் உய்ஞ்சேன்; எம்பெருமானே! உடையானே! அடியேனை, அஞ்சேல்,' என்று ஆண்ட ஆறு அன்றே, அம்பலத்து அமுதே! | [6] |
என்பாலைப் பிறப்பு அறுத்து, இங்கு, இமையவர்க்கும் அறிய ஒண்ணா, தென்பாலைத் திருப்பெருந்துறை உறையும் சிவபெருமான், அன்பால், நீ அகம் நெகவே புகுந்தருளி, ஆட்கொண்டது, என்பாலே நோக்கிய ஆறு அன்றே, எம்பெருமானே! | [7] |
மூத்தானே, மூவாத முதலானே, முடிவு இல்லா ஒத்தானே, பொருளானே! உண்மையும் ஆய், இன்மையும் ஆய், பூத்தானே! புகுந்து இங்குப் புரள்வேனை, கருணையினால் பேர்த்தே, நீ ஆண்ட ஆறு அன்றே, எம்பெருமானே! | [8] |
மருவு இனிய மலர்ப் பாதம், மனத்தில் வளர்ந்து உள் உருக, தெருவுதொறும் மிக அலறி, சிவபெருமான்' என்று ஏத்தி, பருகிய நின் பரம் கருணைத் தடம் கடலில் படிவு ஆம் ஆறு, அருள் எனக்கு, இங்கு இடைமருதே இடம் கொண்ட அம்மானே! | [9] |
நானேயோ தவம் செய்தேன்? சிவாய நம' எனப் பெற்றேன்? தேன் ஆய், இன் அமுதமும் ஆய், தித்திக்கும் சிவபெருமான் தானே வந்து, எனது உள்ளம் புகுந்து, அடியேற்கு அருள் செய்தான் ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே, வெறுத்திடவே! | [10] |